மோடியின் அழைப்பின் பேரில் இஸ்ரேல் பிரதமர் இந்தியா பயணம்..!

Default Image

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இஸ்ரேல் பிரதமர் பென்னட் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இஸ்ரேல் பிரதமர் பென்னட் தனது முதல் பயணத்தை ஏப்ரல் 2, 2022 சனிக்கிழமையன்று மேற்கொள்ளவுள்ளதாகவும் ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 5 வரை இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் இந்தியா வரவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வர உள்ளதாக  கூறப்படுகிறது. இந்தியா-இஸ்ரேல் பரஸ்பர பாராட்டு மற்றும் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டவை என்று நஃப்தாலி பென்னட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பம் மற்றும் இணையம், விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே இந்த பயணத்தின் நோக்கம் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்