இஸ்ரேல்:டெல் அவிவ் நகரின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் பார்கள் மற்றும் உணவகங்களுக்கு பெயர் பெற்ற பரபரப்பான தெருக்களில் ஒன்றான டிசென்காஃப் தெருவில் பல பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து, காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து,துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனர் மற்றும் மற்றொருவரை தேடி வருகின்றனர். மேலும்,துப்பாக்கிச் சூடு காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவுவதால் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். இதனிடையே,இஸ்ரேலிய காவல்துறை, ராணுவ சிறப்புப் படைகள் மற்றும் ஷின் பெட் உளவுத்துறையைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கான உண்மையான காரணம் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.இது பாலஸ்தீனியர்களின் தாக்குதலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஏற்கனவே,கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாலஸ்தீனியர்கள் நடத்திய தொடர் தாக்குதல்களில் சுமார் 11 பேர் கொல்லப்பட்ட நிலையில்,மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் இரன்று பேர் கொள்ளப்பட்டுள்ளதால் டெல் அவிவ் நகரில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…