#shootingAttack:முக்கிய நகரில் துப்பாக்கிச் சூடு – 2 பேர் உயிரிழப்பு!

Default Image

இஸ்ரேல்:டெல் அவிவ் நகரின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் பார்கள் மற்றும் உணவகங்களுக்கு பெயர் பெற்ற பரபரப்பான தெருக்களில் ஒன்றான டிசென்காஃப் தெருவில் பல பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து, காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து,துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனர் மற்றும் மற்றொருவரை தேடி வருகின்றனர். மேலும்,துப்பாக்கிச் சூடு காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவுவதால் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். இதனிடையே,இஸ்ரேலிய காவல்துறை, ராணுவ சிறப்புப் படைகள் மற்றும் ஷின் பெட் உளவுத்துறையைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டிற்கான உண்மையான காரணம் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.இது பாலஸ்தீனியர்களின் தாக்குதலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஏற்கனவே,கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாலஸ்தீனியர்கள் நடத்திய தொடர் தாக்குதல்களில் சுமார் 11 பேர் கொல்லப்பட்ட நிலையில்,மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் இரன்று பேர் கொள்ளப்பட்டுள்ளதால் டெல் அவிவ் நகரில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்