சில தினங்களுக்கு முன்பு விஷால் மற்றும் அவரது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது ஆயுர்வேத மருத்துவத்தின் உதவியால் மீண்டு வந்ததாக கூறப்படுகிறது.
விஷால் அவர்கள் தற்போது நடித்து வரும் திரைப்படத்தில் ஒன்று துப்பறிவாளன் 2. சமீபத்தில் இயக்குநர் மிஷ்கின் மற்றும் விஷாலுக்கும் இடையில் நிலவி வந்த பிரச்சினைகளால் மிஷ்கின் இதிலிருந்து விலகினார். அதனையடுத்து அந்த படத்தை விஷால் அவர்களே இயக்கி, தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடிப்பதாக கூறப்படுகிறது . மேலும் மருது படத்தை இயக்கிய எம். முத்தையா அவர்கள் இயக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் எம். எஸ். ஆனந்த் இயக்கத்தில் “சக்ரா” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 15/20 நாட்களுக்கு முன்பு விஷால் மற்றும் அவரது தந்தை ஜி. கே. ரெட்டிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாம். முதலில் விஷாலின் தந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரிடமிருந்து விஷாலுக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டு தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…