விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநரான பிரியா கிருஷ்ணாசாமி இயக்குவதாக கூறப்படுகிறது.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார்.சமீபத்தில் இவர் மெகா ஹிட் படமான பிச்சைக்காரன் படத்தின் கதையை எழுதி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. 2016ல் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து தயாரித்த திரைப்படம் தான் பிச்சைக்காரன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளான ஜூலை 24 அன்று அவரது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் போஸ்ட்ர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் இவரது அடுத்த படம் பிச்சைக்காரன் 2 ஆக இருக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இவரது அடுத்த படத்தினை தேசிய விருது பெற்ற இயக்குநர் ஒருவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், பிரியா கிருஷ்ணாசாமி என்பவர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் 2018ல் ‘பாரம்’ என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி உண்மையா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…