ஓடிடியில் வெளியாகிறதா வலிமை..?? போனி கபூர் விளக்கம்..!!

Published by
பால முருகன்

வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாகிவுள்ளதாக பரவும் வதந்திக்கு தயாரிப்பாளர் போனிகபூர் விளக்கம் அளித்துள்ளார். 

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை . இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வலிமை திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒத்திவைப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இதற்கு விளக்கம் அளித்த வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ” அஜித் படங்களை எப்படி ஓடிடியில் வெளியீடுவது..?? அவர் திரைப்படங்கள் திரையரங்குகளில் தான் வெளியாகவேண்டும். அணைத்து கொரோனா பிரச்சனை முடிந்த பிறகு படம் திரையரங்குகளில் தான் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.

மேலும் வலிமை படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக படத்திற்கான படப்பிடிப்பு தள்ளி செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வலிமை திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

18 minutes ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

35 minutes ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

58 minutes ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

58 minutes ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம்…மஹாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

2 hours ago