சித்தி-2 தொடரில் இனி முதல் ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் அல்லது மீனா அல்லது தேவயானி நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஓடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தொடர் ராதிகாவின் சித்தி . சமீபத்தில் அதன் இரண்டாம் பாகமும் தொடங்கப்பட்டது.அதில் நடித்து வந்த ராதிகா சமீபத்தில் தேர்தலில் மும்மரமாக ஈடுபட உள்ளதால் சித்தி-2 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது சித்தி-2 தொடரில் இனி ராதிகாவிற்கு பதில் யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.அதன்படி சித்தி-2 தொடரில் ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் இனிமுதல் ரம்யா கிருஷ்ணன் நடிக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அல்லது அந்த கதாபாத்திரத்தில் தேவயானி அல்லது மீனா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் யார் உண்மையாக நடிப்பார் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…