விளக்கில் ஊற்றி வைத்த எண்ணெய் மீதமாகிறதா? அதனை என்ன செய்ய வேண்டும்?

Published by
Sharmi

விளக்கில் ஊற்றி வைத்த எண்ணெய் மீதமானால் அதனை என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றுவது நடைமுறையான செயல். அப்படி தீபம் ஏற்றும் பொழுது கடைபிடிக்க வேண்டியவைகளை இன்று நாம் தெரிந்து கொள்ளலாம். வீட்டில் ஏற்றும் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி ஏற்றுவது சகல சௌபாக்கியங்களும் வீட்டிற்கு வந்து சேரும். கோவிலில் ஏற்றும் விளக்கில் பஞ்ச தீப எண்ணெய் உபயோகிக்கலாம். மேலும், வீட்டில் இருக்கும் விளக்கில் ஒரு எண்ணெய் உடன் மற்றொரு எண்ணெய் சேர்த்து பயன்படுத்த கூடாது. தினமும் பூஜை அறையில் உள்ள பிரதான விளக்கான காமாட்சி விளக்கு அல்லது குத்து விளக்கு ஏற்றும் பொழுது நேரடியாக தீப்பெட்டி கொண்டு அதனை ஏற்ற கூடாது.

ஒரு தீபத்தை கொண்டு தான் பிரதான விளக்கை ஏற்ற வேண்டும். அதற்கு முதலில் ஏதேனும் அகல் அல்லது சிறு விளக்கில் தீபம் ஏற்றி விட்டு அந்த விளக்கை வைத்து பிரதான விளக்கை ஏற்ற வேண்டும். ஏற்றும் பொழுது விளக்கில் உள்ள திரியை நன்கு மேல்நோக்கி முறுக்கி வைத்தால் தீபம் நன்கு எரியும். மேலும் இதனால் எண்ணெய்யும் பச்சை நிறத்திற்கு மாறாது, திரியும் கருப்பாக மாறாது. முக்கியமாக விளக்கில் உள்ள எண்ணெய் பச்சை நிறத்திற்கு மாறக்கூடாது. அதற்கு முன்னரே விளக்கை நன்கு துலக்கி புது எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

சிலர் அந்த பழைய எண்ணெய்யை எடுத்து வைத்து அதனையே மீண்டும் பயன்படுத்துவர். அவ்வாறு செய்வது தவறான செயல். சரி, பின்னர் இந்த பழைய எண்ணெய்யை எதற்கு பயன்படுத்தலாம் என்றால் வீட்டில் உள்ள கதவு, தாழ்ப்பாள் அல்லது இரும்பு சார்ந்த பொருளுக்கு அந்த எண்ணெய்யை துருப்பிடிக்காமல் இருக்க பயன்படுத்தி கொள்ளலாம். இரும்பு பொருட்களில் சனீஸ்வர பகவான் நிறைந்திருப்பதால் இந்த எண்ணெய்யை இதற்கு நீங்கள் பயன்படுத்துவதால் நன்மையே நிகழும்.

அல்லது அந்த பழைய எண்ணெய்யை பயன்படுத்த விரும்பாதவர்கள் ஏதேனும் பாதுகாப்பான இடத்தில் ஊற்றலாம். ஆனால் உங்களது வீட்டில் எந்த இடத்திலும் அதனை ஊற்ற கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். மேலும், விளக்கின் தீபம் தானாக துடிதுடித்து அணைய விடக்கூடாது. காற்றினாலோ அல்லது ஊதியோ அதனை அணைக்க கூடாது. விளக்கை மலையேற்றுவதற்கு மலரை பயன்படுத்த வேண்டும்.

Recent Posts

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

20 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

22 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

1 hour ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

2 hours ago