விளக்கில் ஊற்றி வைத்த எண்ணெய் மீதமானால் அதனை என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றுவது நடைமுறையான செயல். அப்படி தீபம் ஏற்றும் பொழுது கடைபிடிக்க வேண்டியவைகளை இன்று நாம் தெரிந்து கொள்ளலாம். வீட்டில் ஏற்றும் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி ஏற்றுவது சகல சௌபாக்கியங்களும் வீட்டிற்கு வந்து சேரும். கோவிலில் ஏற்றும் விளக்கில் பஞ்ச தீப எண்ணெய் உபயோகிக்கலாம். மேலும், வீட்டில் இருக்கும் விளக்கில் ஒரு எண்ணெய் உடன் மற்றொரு எண்ணெய் சேர்த்து பயன்படுத்த கூடாது. தினமும் பூஜை அறையில் உள்ள பிரதான விளக்கான காமாட்சி விளக்கு அல்லது குத்து விளக்கு ஏற்றும் பொழுது நேரடியாக தீப்பெட்டி கொண்டு அதனை ஏற்ற கூடாது.
ஒரு தீபத்தை கொண்டு தான் பிரதான விளக்கை ஏற்ற வேண்டும். அதற்கு முதலில் ஏதேனும் அகல் அல்லது சிறு விளக்கில் தீபம் ஏற்றி விட்டு அந்த விளக்கை வைத்து பிரதான விளக்கை ஏற்ற வேண்டும். ஏற்றும் பொழுது விளக்கில் உள்ள திரியை நன்கு மேல்நோக்கி முறுக்கி வைத்தால் தீபம் நன்கு எரியும். மேலும் இதனால் எண்ணெய்யும் பச்சை நிறத்திற்கு மாறாது, திரியும் கருப்பாக மாறாது. முக்கியமாக விளக்கில் உள்ள எண்ணெய் பச்சை நிறத்திற்கு மாறக்கூடாது. அதற்கு முன்னரே விளக்கை நன்கு துலக்கி புது எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
சிலர் அந்த பழைய எண்ணெய்யை எடுத்து வைத்து அதனையே மீண்டும் பயன்படுத்துவர். அவ்வாறு செய்வது தவறான செயல். சரி, பின்னர் இந்த பழைய எண்ணெய்யை எதற்கு பயன்படுத்தலாம் என்றால் வீட்டில் உள்ள கதவு, தாழ்ப்பாள் அல்லது இரும்பு சார்ந்த பொருளுக்கு அந்த எண்ணெய்யை துருப்பிடிக்காமல் இருக்க பயன்படுத்தி கொள்ளலாம். இரும்பு பொருட்களில் சனீஸ்வர பகவான் நிறைந்திருப்பதால் இந்த எண்ணெய்யை இதற்கு நீங்கள் பயன்படுத்துவதால் நன்மையே நிகழும்.
அல்லது அந்த பழைய எண்ணெய்யை பயன்படுத்த விரும்பாதவர்கள் ஏதேனும் பாதுகாப்பான இடத்தில் ஊற்றலாம். ஆனால் உங்களது வீட்டில் எந்த இடத்திலும் அதனை ஊற்ற கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். மேலும், விளக்கின் தீபம் தானாக துடிதுடித்து அணைய விடக்கூடாது. காற்றினாலோ அல்லது ஊதியோ அதனை அணைக்க கூடாது. விளக்கை மலையேற்றுவதற்கு மலரை பயன்படுத்த வேண்டும்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…