நாம் பொதுவாகவே கொண்டைக்கடலையை அவித்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், வித்தியாசமான முறையில் கொண்டைக்கடலை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
நாம் பொதுவாகவே கொண்டைக்கடலையை அவித்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், வித்தியாசமான முறையில் கொண்டைக்கடலை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையானபொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் கொண்டைக்கடலையை நீங்கள் இந்த ரெசிபி செய்வதற்கு முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் காலையில் ஊற வைத்த கொண்டைக்கடலையை மிக்சியில் போட்டு, அதனுள் சிறிய துண்டு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, பச்சை மிளகாய் ஒன்று, சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பாக அதை தனியாக ஒரு பௌலில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் மீண்டும் ஒரு பெளவுலில் அரிசி மாவு அரை கப் எடுத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும்.
இந்த மாவை கொண்டை கடலை கலவையில் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அடுப்பில் தோசை சுடும் பாத்திரத்தை வைத்து, அதனுள் தோசை ஊற்றி தயார் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தோசை நமது உடலுக்கு பல வகையான சத்துக்களை வழங்குவதோடு, வித்தியாசமான முறையில், நம் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கும்போது அது அவர்களுக்கு பிடித்தமானதாகும். இந்த தோசைக்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, பூண்டு சட்னி என எதை வைத்து சாப்பிட்டாலும் மிகவும் சுவையாக காணப்படும். இப்போது கொண்டைக்கடலை தோசை தயார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேயில் ஜனவரி 31, 2025 அன்று நடைபெற்றது. இந்தியா…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியில் பல்வேறு முக்கிய நியமனங்களை அக்கட்சி தலைவர் விஜய் மேற்கொண்டார். விசிகவில்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
சென்னை : தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இன்று…
டெல்லி : டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல்…