நாம் பொதுவாகவே கொண்டைக்கடலையை அவித்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், வித்தியாசமான முறையில் கொண்டைக்கடலை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
நாம் பொதுவாகவே கொண்டைக்கடலையை அவித்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், வித்தியாசமான முறையில் கொண்டைக்கடலை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையானபொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் கொண்டைக்கடலையை நீங்கள் இந்த ரெசிபி செய்வதற்கு முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் காலையில் ஊற வைத்த கொண்டைக்கடலையை மிக்சியில் போட்டு, அதனுள் சிறிய துண்டு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, பச்சை மிளகாய் ஒன்று, சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பாக அதை தனியாக ஒரு பௌலில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் மீண்டும் ஒரு பெளவுலில் அரிசி மாவு அரை கப் எடுத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும்.
இந்த மாவை கொண்டை கடலை கலவையில் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அடுப்பில் தோசை சுடும் பாத்திரத்தை வைத்து, அதனுள் தோசை ஊற்றி தயார் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தோசை நமது உடலுக்கு பல வகையான சத்துக்களை வழங்குவதோடு, வித்தியாசமான முறையில், நம் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கும்போது அது அவர்களுக்கு பிடித்தமானதாகும். இந்த தோசைக்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, பூண்டு சட்னி என எதை வைத்து சாப்பிட்டாலும் மிகவும் சுவையாக காணப்படும். இப்போது கொண்டைக்கடலை தோசை தயார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…