சந்திரமுகி 2 ல் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என்று படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.
நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் சந்திரமுகி 2. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அவரது திரைப்பயண வாழ்க்கையை மாற்றியமைத்த படங்களில் ஒன்றாகும். மேலும் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் ஜோதிகா மற்றும் சிம்ரன் ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டது. ஆனால் அதனை அவர்கள் மறுத்து விட்டனர். அடுத்ததாக ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இது குறித்து விளக்கமளித்த படக்குழுவினர், கியாரா அத்வானி நடிப்பதாக வெளியான தகவல் வதந்தி என்றும், படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பின்னரே அவை யாவும் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…