பிரபுதேவாவுக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டதா!

Published by
Rebekal

பிரபுதேவாவுக்கு இரண்டாவது திருமணம் முடிந்து, தனது காதல் மனைவியுடன் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாதாரணமான நடன கலைஞராக சினிமாவில் அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராகவும், இந்திய அளவில் இயக்குனராகவும் பிரபலமான நடன கலைஞராகவும் வலம் வரக்கூடிய நடிகர் தான் பிரபுதேவா. இவர் கடந்த 1995ஆம் ஆண்டு ரமலத் என்னும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்களும் உள்ளனர்.   அவரது மூத்த மகன் கடந்த 2008ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார், அதன்பின் விஜய் உடன் நயன்தாரா வில்லு படத்தில் நடித்தபோது அந்த படத்தை பிரபுதேவா தான் இயக்கினார். அப்பொழுது நயன்தாராவுடன் அவருக்கு காதல் மலர்ந்ததால் தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்து கொண்டார்.

அதன் பின் நயன்தாராவுடன் சேர்ந்து வெளியில் எல்லாம் சென்று வந்தார். மேலும் இருவரும் காதலிப்பதும் சமூக வலைதளங்கள் மற்றும் திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இவருக்காக நயன்தாரா மதம் மாறி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாலும் சில காரணங்களால் இவர்களின் காதல் முறிந்து திருமணம் நடைபெறவில்லை. இவர்களுடைய காதலும் கடந்த 2012 ஆம் ஆண்டுடன் முடிந்து விட்டது. அதன் பின் பிரபுதேவா மிகவும் உடல் நலம் குன்றிய நிலையில் இருந்துள்ளார்.

அப்பொழுது  அவருக்கு பிசியோதெரபி டாக்டர் ஒருவர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். அப்பொழுது அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபுதேவா அந்த பிசியோதெரபி டாக்டரை ரகசியமாக குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபுதேவாவின் வீட்டில் இருவரும் வசித்து வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதுகறித்து பிரபுதேவாவிடம் கேட்கும் பொழுது அவர் மறுப்பு தெரிவிக்கவும் இல்லை, அதை ஒப்புக் கொள்ளவுமில்லை உண்மை என்ன என்பது குறித்து அவர் தான் சொல்ல வேண்டும்.

Published by
Rebekal

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

12 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

13 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

14 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

14 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

15 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

17 hours ago