இரவு நேரத்தில் பெரும்பாலும் பலர் வீட்டில் சாதம் மீதமாக இருப்பது வழக்கம் தான். ஆனால் சிலருக்கு குளிர்ந்த சாதத்தை சாப்பிடுவது பிடிக்காது. எனவே தேவையில்லாமல் அதை கொட்ட வேண்டிய நிலை ஏற்படும். இருந்தாலும் சாதத்தை கொட்டி விட்டோமே என்ற கவலையும் பலருக்கு இருக்கும். இனிமேல் சாதத்தை தயவுசெய்து வீணாக்காதீர்கள். இந்த பழைய சாதத்தை வைத்து எப்படி அட்டகாசமான சுவையில் தோசை செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
அரைக்க : முதலில் பழைய சாதம் 2 கப் அளவு எடுத்து, அதை மிக்சியில் சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் தோல் நீக்கிய உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தாளிப்பு : கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
மாவுக் கலவை : நாம் அரைத்து எடுத்து வைத்துள்ள மாவுடன் சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து, பொடி பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு நாம் தாளித்து வைத்துள்ளதை இந்த மாவில் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளவும்.
தோசை : இறுதியாக தோசை கல்லை அடுப்பில் வைத்து, சூடேறியதும் தோசை மாவை ஊற்றி கொள்ளவும். பின்பு மாவின் மீது பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் கேரட் ஆகியவற்றைத் தூவி பொன்னிறமாக இருபுறமும் வரும் வரை சுட்டு எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் அட்டகாசமான பழைய சாதம் தோசை தயார்.
நிச்சயம் ஒருமுறை செய்து பாருங்கள். இது பழைய சாதத்தில் செய்தது என்பது கூட தெரியாத அளவிற்கு அட்டகாசமான சுவையுடன் இருக்கும்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…