உக்ரைனை கடுமையாக ரஷ்யா தாக்குவதற்கு அதன் கருங்கடல் கனவுதான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய விரும்பிய நிலையில், அந்நாட்டிற்குள் நுழைந்து ரஷ்யா 7 வது நாளாக உக்கிரமாக தாக்கி வருகிறது.அந்த வகையில்,உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் ஈடுபட்டுள்ளன.ஆனால்,ரஷ்யாவுக்கு உக்ரைன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில்,உக்ரைனை கடுமையாக ரஷ்யா தாக்குவதற்கு அதன் கருங்கடல் கனவுதான் காரணம் என்று கூறப்படுகிறது.ஏனெனில், ரஷ்யாவில் உள்ள பல துறைமுகங்கள் ஆண்டு முழுவதுமான வணிக பயன்பாட்டிற்கு உகந்தவையாக இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால்,கருங்கடலின் கிரிமியாவில் உள்ள ஆண்டு முழுவதுமான வணிக பயன்பாட்டிற்கு உதவும் கேத்ரின் தி கிரேட் என்ற துறைமுகத்தை முதலில் ரஷ்யா குறி வைத்தது.
இதன் விளைவாக,கிரிமியாவை ரஷ்யா தன் வசமாக்கியது. வணிக நோக்கத்திற்காக மட்டும் அல்லாமல்,அடிக்கடி மோதலுக்கு ஆட்படும் மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்சனை தனது எல்லைக்குள் நுழைந்து விடாமல் இருக்க கருங்கடலை தான் ஒரு பாதுகாப்பு கவசமாக ரஷ்யா எண்ணுகிறது.இதனால்,பாதுகாப்பு விசயத்திலும் கருங்கடலின் மீது ரஷ்யா தனது கவனத்தை செலுத்தி வருகிறது.
இந்த சூழலில்,உக்ரைன் மற்றும் ஜார்ஜியா போன்ற நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைய விரும்புவதால் தனது கருங்கடல் ராஜ்ஜியம் களைவதாக ரஷ்யா எண்ணியது.
குறிப்பாக,நேட்டோ நாடுகளின் விரிவாக்கம் கருங்கடல் வழியாக தனது நாட்டிற்குள்ளும் நுழையும் என்ற ஆபத்தை ரஷ்யா உணர்ந்தது. இதனிடையே,நேட்டோவின் ஏவுகணை தடுப்பு மையம் ருமேனியாவில் அமைக்கப்பட்டது ரஷ்யாவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.
இதனால்,கருங்கடல் பகுதியை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து பாதுகாப்பை பலப்படுத்துவதான் ஒரே வழி என்று ரஷ்யா எண்ணியது.அதன் விளைவே தற்போது உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் ஆக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…