தொப்பை உங்களுக்கு பிரச்சனையா இருக்குதா? அப்ப இதை ஃபாலோ பண்ணுங்க!

Published by
லீனா

தொப்பை குறைவதற்கான வழிமுறைகள். 

இன்று பலரின் மிகப்பெரிய பிரச்சனையாக காணப்படுவது இந்தத்  தொப்பை தான். மிகவும் இளம் வயதிலேயே தொப்பை வைத்து வயதானவர்கள் போல் காட்சியளிக்கும் இவர் களுக்கு இது ஒரு மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது அதனை சரிசெய்வதற்காக மருத்துவமுறைகளை கையாண்டு கெமிக்கல் கலந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதால், பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது.

தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் தொப்பையை குறைப்பதற்கான வழிகள் பற்றி பார்ப்போம்.

இஞ்சி சாறு

இஞ்சி சாறு உடலுக்கு மிகவும் ஏற்ற ஒன்று. இனி சாற்றை தேன் கலந்து இளம் சூட்டில், காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால், வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறைந்துவிடும்.

கிரீன் டீ

நம்மில் அநேகர் இன்று பால் தேநீரை விரும்பிப் குடிப்பதுண்டு. ஆனால், இவற்றால் நமக்கு எந்த பலனும் இல்லை. ஆனால் கிரீன்டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனை தினமும் குடித்து வந்தால் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து தொப்பை குறைக்க உதவுகிறது. மேலும் இது உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.

தானியங்கள்

தானிய வகைகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் நாம் ஒரு தானிய வகையை நமது உணவில் சேர்த்து வந்தால் நமது உடலில் உள்ள நார்ச்சத்து, கேட்ட கொழுப்பை குறைத்து தொப்பை வளர்வதை தடுக்கிறது.

தூக்கம்

நம்மில் அதிகமானோர்,வேலைப் பளுவின் காரணமாக இரவு மிகவும் நேரம் சென்று தூங்கி, காலையில் மிகவும் நேரம் சென்று எழுகின்றனர். இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பெரிய விதத்தில் கெடுதல் ஏற்படுத்துகிறது. எனவே சரியான நேரத்தில் தூங்கி அதிகாலையில் நேரத்திற்கு எழும்போது,  நமது உடலில் வளர்சிதை மாற்றங்கள் பாதிக்கப்படாமல் சரியாக இருந்து தொப்பை வளர்வதை தடுக்கிறது.

தண்ணீர்

நாம் உயிர் வாழ்வதற்கு உணவு எவ்வளவு முக்கியமானதோ, அதுபோல தண்ணீர் மிகவும் முக்கியமானது. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் ஒரு லிட்டர் அளவு  குடித்து வந்தால் இரவு முழுவதும் வெறுமையாக இருந்த வயிற்றில், தங்கியிருக்கும் கழிவுகளை அகற்றி உடலில் கெட்ட கொழுப்புக்களை தங்க விடாமல் தொப்பை ஏற்படாமல் காக்கிறது.

Published by
லீனா

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

32 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

37 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

55 mins ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

1 hour ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago