நிபா வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை விடுத்துள்ளதாக இணையத்தில் பரவும் வதந்தியான செய்திகள்.
இன்று அதிகமானோர் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பல உண்மை செய்திகளை அறிந்து கொண்டாலும், பல வதந்தியான செய்திகளும் பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில், மக்களை அச்சுறுத்தும் வகையில் இணையத்தில் வதந்தியான செய்தி பரவி வருகிறது.
அதன்படி, உலக சுகாதார நிறுவனம் (WHO) இப்போது இந்தியாவில் நிபா வைரஸ் வெடிப்பதாக எச்சரித்துள்ளது. இது கொரோனா வைரஸை விட ஆபத்தானது. இந்த வைரல் செய்தியை சமீபத்தில் பல பேஸ்புக் பயனர்கள் வெளியிட்டுள்ளனர். அதனுடன் “தி நியூயார்க் டைம்ஸ்” எழுதிய “நிபா வைரஸ், அரிய மற்றும் ஆபத்தான வைரஸ், இந்தியாவில் பரவுகிறது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையின் இணைப்பைப் பகிர்ந்துள்ளனர்.
இதனை ஆராய்ந்த AFWA, இந்த செய்தி வதந்தியானது என கண்டறிந்துள்ளது. இந்தியாவில் நிபா வைரஸ் வெடித்ததற்கான கடைசி WHO எச்சரிக்கை ஆகஸ்ட் 2018 இல் வெளியிடப்பட்டிருந்ததும், அதனுடன் இணைத்து பகிரப்பட்ட “தி நியூயார்க் டைம்ஸ்” இன் கட்டுரை ஜூன் 4, 2018 அன்று வெளியிடப்பட்டது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்தியாவில் நிபா வைரஸ் வெடித்தது குறித்து WHO இப்போது எச்சரித்துள்ளது என்ற வைரஸ் செய்தி தவறானது என்றும், இது இரண்டு ஆண்டு பழமையான எச்சரிக்கை மற்றும் உலக சுகாதார அமைப்பிலிருந்து புதிய எச்சரிக்கை எதுவும் வரவில்லை என்றும் தெரியவந்துள்ளது
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…