10 ஆண்டுகள் கழித்து பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார்த்திக் அவர்கள் வெற்றி படமான கைதி படத்தை தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் டைரக்ட் செய்கின்ற சுல்தான் படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகையாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்ததாகவும், விரைவில் ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார்.
இதனையடுத்து நடிகர் கார்த்திக் அவரது அடுத்த படத்தை இயக்குனர் மித்ரன் டைரக்ட் செய்கிறார் என்று தகவல் வெளியாகியிருந்தது. பிஎஸ் மித்ரன் இரம்புத்திரை மற்றும் ஹீரோ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் தயாரிப்பாளராக சிங்கம் 2 மற்றும் தேவ் படத்தை தயாரித்த லட்சுமண் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது .ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்தின் திரைக்கதை எழுதும் பணிகள் கிட்டதட்ட முடிந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்தி 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்தை என்னும் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. விரைவில் கார்த்தி – மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் [செப்டம்பர் 30] முத்துவின் செல்லை வாங்கி சத்யா பற்றிய வீடியோவை வெளியிட…
கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று…
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்சி ஒரு பக்கம் கலகலப்பாகவும், மற்றொரு பக்கம் சர்ச்சையில் சிக்கி…
சென்னை : தமிழக அரசியலில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த 'துணை முதலமைச்சர்' பதவி குறித்த கேள்விக்கு நேற்று முன்தினம் பதில்…
சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை…
கான்பூர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின்…