அதிகமா டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்சனை உள்ளதா ?

Published by
லீனா

அதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்.

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் டீ குடிப்பதற்கு அடிமையாக தான் உள்ளனர். பலரும் டீயை மட்டும் குடித்து தனது பசியை போக்கி கொள்வதுண்டு. ஆனால், இவ்வாறு நாம் குடிப்பது நமது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது அல்ல.

ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் டீ குடிப்பதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம்.

நாம் அருந்தும் டீயில் காஃபைன் என்ற ஒரு பொருள் உள்ளது. டீயை நாம் அதிகமாக குடிக்கும் போது, இந்த பொருள் நமது குடலிலேயே தங்கி, மன அமைதியை கெடுக்கிறது. உடலுக்கு இரும்புசத்து மிக அவசியம். ஆனால், டீயில் உள்ள டானிஸ் என்ற வேதிப்பொருள், நமது உடல் இரும்புச்சத்தினை உறிஞ்சுவதையே தடுத்து விடுகிறது.

சில பேர் தங்களது காலை கடனை முடிக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக டீ குடித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருப்பார். ஆனால், இவ்வாறு டீயை அதிகமாக குடித்து வந்தால், அது மலசிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு டீ குடிக்கும் பட்சத்தில், இது கருச்சிதைவை ஏற்படுத்தக் கூட வழிவகுக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் எதற்காகவாவது மருந்து குடித்தால், அது மருந்து (அல்லது) மாத்திரையின் வீரியத்தை போக்கி விடும்.

நாம் டீயை குடிக்கும் போது அதிக சூட்டோடு குடித்தால், இது நமது உணவு குழாயில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கிறது எனவே, அதிக சூட்டோடு டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

Published by
லீனா

Recent Posts

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

18 seconds ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

5 mins ago

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

16 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago