கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீரிழிவு மாத்திரை மருந்தாகிறதா?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெட்ஃபோர்மின் என்ற மாத்திரையை மருந்தாக பயன்படுத்தலாம் என சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாத்திரை பொதுவாக, நீரிழிவு மருந்து மார்பக புற்றுநோய் போன்ற நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக, இந்த மாத்திரை டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்க உதவுகிறது.
வுஹானில் உள்ள சில மருத்துவர்களால் பொதுவான நீரிழிவு மருந்து ஒரு ‘அதிசய மருந்து’ என்று பாராட்டப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், நீரிழிவு நோய்க்கு மெட்ஃபோர்மின் எடுக்கும் COVID-19 நோயாளிகளில் இறப்பு விகிதம் மருந்து எடுத்துக் கொள்ளாத நீரிழிவு நோயாளிகளை விட மிகக் குறைவு என வுஹானில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் COVID-19 சிகிச்சையில் பயன்படுத்த டெக்ஸாமெதாசோன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்தியாவில் மிதமான மற்றும் கடுமையான COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அழற்சி எதிர்ப்பு மருந்தைப் பயன்படுத்த சுகாதார அமைச்சகம் அனுமதித்துள்ளது. மோசமான உடல்நலக்குறைவான நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் பயன்படுத்தவும் உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்துள்ளது.
சென்னை : ரஜினிகாந்த் எப்போதுமே நல்ல படங்கள் வெளியானால் அந்த படங்களைப் பார்த்துவிட்டுப் பாராட்டிய தவறியது இல்லை என்றே சொல்லலாம்.…
சென்னை : வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு…
சென்னை : கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க ரூ.247 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி, 2023…
சென்னை - சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ அக்டோபர் 19] எபிசோடில் சீதா தன் திருமண ஆசையை முத்துவிடம் சொல்கிறார்.. …
சென்னை : தீபாவளி பண்டிகைக்கு வெளியூருக்குச் சென்று குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள். அப்படி, கொண்டாடிவிட்டு அடுத்த நாள் அவர்களது…
பெங்களூரு : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற வந்த முதல் டெஸ்ட் போட்டியின் இன்றைய 4-ஆம் நாள் ஆட்டம்…