பிக்பாஸ் – 4 ல் கலந்து கொள்ள போகிறாரா பிகில் பட சிங்கபெண்.! ட்வீட் செய்து விளக்கம்.!

Published by
Ragi

பிக்பாஸ் சீசன் 4 ல் பிகில் பட பிரபலமான அமிர்தா ஐயர் கலந்து கொள்ள போவதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. சமீபத்தில் கூட உலகநாயகன் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலானது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பிக்பாஸ் சீசன் 4 வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. நேற்றைய தினம் உலகநாயகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பிக்பாஸில் தோன்றும் சில காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் வில்லன், ஜெமினி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை கிரண் ரத்தோட் மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் அவர்களும் கலந்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் பிகில் படத்தில் கால்பந்து வீரராக நடித்த அமிர்தா ஐயர் கலந்து கொள்ள போவதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தது. அதற்கு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஏன் அனைவரும் எனது பெயரை பிக்பாஸ் லிஸ்ட்டில் சேர்க்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதிலிருந்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது. . தற்போது அமிர்தா ஐயர் கவினுடன் லிப்ட் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Ragi

Recent Posts

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

31 minutes ago

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

35 minutes ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

2 hours ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

3 hours ago

‘விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவையும் நான் மூடினேன்’ – திருமாவளவன்.!

திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…

3 hours ago

பூத் கமிட்டி கருத்தரங்கம்: கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.!

கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…

3 hours ago