அனுஷ்கா சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் அனுஷ்கா. இவர் விஜய், அஜித்குமார், ரஜினி உள்ளிட்ட பல பிரபல ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் கதையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பவர். ஆனால் அவர் நடித்த இஞ்சி இடுப்பழகி படம் அவரது சினிமா வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டது.
ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்த இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை அதிகரித்து குண்டாக நடித்திருப்பார். ஆனால் தற்போது வரை அவரால் உடல் எடையை குறைக்க இயலவில்லை என்று தான் கூற வேண்டும். அதனால் அவருக்கு வரும் பட வாய்ப்புகள் அனைத்தும் குறைய துவங்கியது. அனைவரும் அவரது உடல் எடையை வைத்து கேலி கிண்டல் செய்வதாக கூறப்படுகிறது. எனவே தற்போது அனுஷ்கா திரைத்துறையில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பட வாய்ப்புகள் குறைந்ததற்காக மட்டுமில்லாமல் திருமணம் நடக்காத விரக்தியில் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும். ஆனாலும் இந்த செய்தி அனுஷ்கா ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…