அனுஷ்கா சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் அனுஷ்கா. இவர் விஜய், அஜித்குமார், ரஜினி உள்ளிட்ட பல பிரபல ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் கதையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பவர். ஆனால் அவர் நடித்த இஞ்சி இடுப்பழகி படம் அவரது சினிமா வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டது.
ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்த இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை அதிகரித்து குண்டாக நடித்திருப்பார். ஆனால் தற்போது வரை அவரால் உடல் எடையை குறைக்க இயலவில்லை என்று தான் கூற வேண்டும். அதனால் அவருக்கு வரும் பட வாய்ப்புகள் அனைத்தும் குறைய துவங்கியது. அனைவரும் அவரது உடல் எடையை வைத்து கேலி கிண்டல் செய்வதாக கூறப்படுகிறது. எனவே தற்போது அனுஷ்கா திரைத்துறையில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பட வாய்ப்புகள் குறைந்ததற்காக மட்டுமில்லாமல் திருமணம் நடக்காத விரக்தியில் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும். ஆனாலும் இந்த செய்தி அனுஷ்கா ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…