அமெரிக்கா விமான தளத்தின் மீது ஏவுகனை தாக்குதல்.. ஈரானின் பதிலடிகளால் உலக நாடுகள் பதற்றம்..

Published by
Kaliraj
  • ஈரான் நாட்டின் உளவுத்துறை ராணுவ தளபதியாக இருந்த சுலைமானியை அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்கி கொன்றது.
  • இதன் காரணமாக ஈரான் அமெரிக்காவின் இராணுவ தளங்களை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தியது.

ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தின் அருகே கடந்த 3-ம் தேதி அமெரிக்க நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும்  ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் இறந்தனர்.

இதை தொடர்ந்து அமெரிக்காவை  கண்டிப்பாக பழி வாங்குவோம் என ஈரான் வெளிப்படையாகவே கூறியது. ஈரான் கடந்த 8ஆம் தேதி அதிகாலை ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் உள்ள ராணுவ தளத்தின் மீது  10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி  தாக்குதல் நடத்தியது. தாக்குதல்களில் குறைந்தது 80 அமெரிக்க வீரர்கள் இறந்து உள்ளதாக தகவல் வெளியானது.

அதனை தொடர்ந்து மீண்டும் ஈராக் விமானப்படை தளம் மீது, அமெரிக்க ராணுவத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் ராணுவம்  அமெரிக்க ராணுவத்தை குறி வைத்து, 4 ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏ.எப்.பி., நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை அமெரிக்கா தாக்குதல் நடத்தி கொன்றபின், இரு நாடுகளுக்கிடையே போர் அபாயம் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தங்கள் பகுதியைவிட்டு வெளியெறவேண்டும் என ஈரான் கோரிக்கையை முன்வைத்து வருகிறது.

Published by
Kaliraj

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

3 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

4 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

5 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

5 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

6 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

8 hours ago