அதிபர் மறைவு: ஈரானில் ஜூன் 28ம் தேதி அதிபர் தேர்தல்?

Published by
கெளதம்

சென்னை: ஈரானில் ஜூன் 28-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து, அந்நாட்டின் 14வது அதிபர் தேர்தல் ஜூன் 28ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியகியுள்ளது. அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்காலிக அதிபராக முகமது முக்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரானின் அரசியலமைப்பின் 131 வது பிரிவின்படி, ஜனாதிபதி தனது கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், முதல் துணை ஜனாதிபதி பதவி ஏற்பார். மேலும், அது 50 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய இடைக்கால ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளார் என்று Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு தகவலின்படி, மே 30 முதல் ஜூன் 3 வரை வேட்பாளர்கள் பதிவு செய்யப்படும் எனவும், அதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் ஜூன் 12 முதல் 27 வரை தேர்தல் பிரச்சாரங்களை நடத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. ஈரானில் அதிபர் தேர்தல் 2025-ல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போதைய அதிபர் ரைசியின் மரணத்தைத் தொடர்ந்து தேர்தல் முன்னதாகவே நடைபெற உள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

2 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

2 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

3 hours ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

14 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

14 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

16 hours ago