ஈரான் நாட்டை சார்ந்த சில மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன் சீனாவில் உள்ள வுகான் நகரில் இருந்து விமானம் மூலம் ஈரான் அழைத்து வரப்பட்டார்கள்.அழைத்து வரப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் 14 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைத்து பரிசோதனை செய்த பின்னர் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகு அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் ஈரானில் உள்ள ஹிய்ம் நகரில் கொரோனா வைரசால் 5 பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. ஆனாலும் கொரோனா வைரசால் 2 பேர் சிகிச்சை பலனின்றி கடந்த 19-ம்தேதி உயிரிழந்தனர்.
இதையெடுத்து நேற்று மேலும் 2 பேர் இறந்ததாக ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இதனால் ஈரானில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2300 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,288 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது குறைந்தாலும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…