ebrahim raisi helicopter [file image]
சென்னை : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக வெளியான செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் அதிபர் ரைசி மற்றும் அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோர் பயணித்த ஹெலிகாப்டர் மலைப் பகுதியில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் ஈரான் அதிபர் சென்ற இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக முதற்கட்டமாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய தகவலை அறிந்த மீட்புப் படை துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
15 மணி நேரம் மீட்பு பனி நடந்துவந்த நிலையில், ஹெலிகாப்டர் நொறுங்கிய நிலையில் கிடைத்தது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த விபத்தில் யாருமே உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு இல்லை எனவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரான்-அஜர் பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்துவிட்டு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி திரும்பி சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டரில் அதிபர் இப்ராஹிம் ரைசி, அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி மற்றும் பல அதிகாரிகள் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் ஒருவரும் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை எனவும், 9 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல்கள் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…