ஈரானின் உயர்ந்த அணு விஞ்ஞானி மொஹ்சென் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், இஸ்ரேலை ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானின் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவரான மொஹ்சென் பக்ரிசாதி அவர்கள் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இவரது படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த ஈரானின் வெளியுறவு மந்திரி மற்றும் அரசு சார்பில் இது படுகொலை மற்றும் பயங்கரவாத சம்பவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பயங்கரவாத சம்பவத்தில் இஸ்ரேலுக்கும் பங்கு இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை அமைதியான நோக்கங்களுக்காக வலியுறுத்தி வருகின்ற நிலையில் 2010 மற்றும் 2012 க்கு இடைப்பட்ட காலங்களில் நான்கு ஈரானிய அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் நாட்டின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கொலையில் இஸ்ரேல் உடந்தையாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது, 2018 ஆம் ஆண்டு மே மாதம் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் அவர்கள் பங்கும் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஈரான் தயாரித்த செரிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவு அதிகரித்து இருப்பது குறித்த புதிய பிரச்சனைகள் ஏற்கனவே எழுந்து வருகின்ற சூழ்நிலையில், தற்பொழுது அணு விஞ்ஞானியின் படுகொலை ஈரானில் கவலை அளிக்கக்கூடிய ஒரு செய்தியாக இருப்பதாகவும் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …