டிரம்பை கொலை செய்யும் நபருக்கு ரூ.21கோடி பரிசு என அறிவித்த ஈரான் சபாநாயகர் .!

Published by
murugan
  • சில நாட்களுக்கு முன் ஈரான் படைத்தளபதி சுலைமானியை அமெரிக்கா ஆளில்லா குட்டி விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது.
  • சுலைமானியை  டிரோன் மூலம் தாக்குதல் நடத்திக் கொன்ற டிரம்பை கொலை செய்யும் நபருக்கு ரூ.21. 35 கோடி பரிசு என சபாநாயகர் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஈரான் படைத்தளபதி சுலைமானியை அமெரிக்கா ராணுவம் ஆளில்லா குட்டி விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது. தங்கள் தான் தாக்குதல் நடத்தியதாகவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டது.இதனால் அமெரிக்கா -ஈரான் இடையே போர் ஏற்படும் நிலவும் சூழல் உள்ளது.

சுலைமானியை கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக சுலைமானி சொந்தமான மாகாணமான கெர்மனில் ஒரு அரசியல்வாதி அமெரிக்க அதிபரை கொலை செய்வேன் என சபதம் எடுத்து உள்ளர். இந்நிலையில் மத்திய கெர்மன் மாகாணத்தை சார்ந்த சட்டப்பேரவை சபாநாயகரான அகமது ஹம்சே நேற்று எம்எல்ஏக்களிடம் பேசினார்.

அப்போது சுலைமானியை  டிரோன் மூலம் தாக்குதல் நடத்திக் கொலை செய்த அமெரிக்க அதிபர் டிரம்பை பழிவாங்க ஒவ்வொரு குடிமகனும் சபதம் எடுக்க வேண்டும். மேலும் டிரம்பை கொலை செய்யும் நபருக்கு ரூ.21. 35 கோடி பரிசு வழங்குவேன் என கூறினார்.

நமது அப்பாவி மக்களை கொலை செய்யும் நபர்களை அடியோடு அழிக்க நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது..?எனவும் கூறினார். இதற்கு முன் காசிம் சுலைமானின் இறுதி ஊர்வலத்தின் போது மூத்த அதிகாரி ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு 8 கோடி அமெரிக்க டாலர்கள் ( அதாவது இந்திய மதிப்பில் ரூ.576 கோடி) பரிசு வழங்கப்படும் என அறிவித்தார் என்பது குறிபிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

6 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

6 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

7 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

7 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

8 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

9 hours ago