உக்ரைன் மக்கள் பயணித்த விமானத்தை இரண்டு ஏவுகணைகளால் தாக்கிய ஈரான்!

Default Image

உக்ரைன் பயணிகள் விமானத்தை 25 வினாடிகளில் 2 ஏவுகணைகளை ஈரான் தாக்கி உள்ளது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தங்கள் வான் எல்லையில் பறந்த உக்ரைன் பயணிகள் விமானத்தை தவறுதலாக ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனால் விமானத்தில் இருந்த 176 பேருமே மொத்தமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் ஈரானின் சிவில் ஏவியேடின்  எனும் அமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனவரி மாதம் நடந்த நிகழ்வில் முதல் ஏவுகணை விமானத்தை தாக்கியபோது பல பயணிகள் உயிருடன் இருந்தது தெரிய வந்தது. ஆனால் எச்சரிக்கை கிடைப்பதற்கு முன்பதாகவே அடுத்த 25 நொடிக்குள் ஐந்தாவது ஏவுகணையும் தொடுக்கப்பட்டதால் விமானம் விழுந்து நொறுங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களில் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஈரான் மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்