விசாரணை முடிந்தது: நடிகர் விஜய்க்கு மாஸ்டர் படத்தில் இத்தனை கோடி சம்பளமா.! வெளியிட்டது வருமான வரித்துறை.!

Default Image

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் 8 வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். அதாவது, கடந்த மாதம் பிகில் பட விவகாரத்தில் நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சில அறை, டிராயர்கள், லாக்கர்கள் அடைத்து சீல் வைக்கப்பட்டிருந்தது. அதனை வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்து, அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் வீட்டில் நடந்த விசாரணை முடிந்துள்ளது. இதில் நடிகர் விஜயின் சம்பள குறித்த விபரங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, தற்போது நடித்து முடித்திருக்கும் மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளார் என்றும் 2 திரைப்பட வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளர் என தெரிவித்துள்ளனர். இதனிடையே சமீபத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரான லலித் குமார் வீட்டில் ஐ.டி ரெய்டு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்