சர்வதேச யோகா தினம் -அங்கமாக்கி கொள்ளுங்கள் அன்றாடம்!

Published by
kavitha

இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் இன்று 6-வது சர்வதேச யோகா தினத்தை ஒட்டி நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி  யோகா குறித்து உரையாற்றியுள்ளார்.

சர்வதேச யோகா தினமானது ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை வரவேற்கும் விதமாகவும் உடல் ஆரோக்கியத்தை வழுப்படுத்தும் கலைகளில் ஒன்றாக திகழக்கூடியதுமான யோகா  நம்பிக்கையை விதைக்கும் என நாட்டு மக்களிடம்  இன்று காலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

நாட்டு மக்களிடம் பிரதமரின் உரை:

நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி 6ஆவது சர்வதேச யோகா தினத்திற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும். சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது.

இந்த ஆண்டு குடும்பத்துடன் யோகா செய்யுங்கள், கொரோனா பரவி வரும் நிலையில் நாட்டு மக்கள் யோகா கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளதாக தெரிவித்த பிரதமர் உங்களது அன்றாட வாழ்க்கையில் யோகாவை ஒரு அங்கமாக பழக்குங்கள். யோகா உடல் வலிமையுடன் நம் மன வலிமையையும் மேம்படுத்துகிறது. யோகாவிற்கு மதம், மொழி, நாடு என்ற எந்த பேதமும் கிடையாது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த உலகம் தற்போது யோகாவின் பயன்களை உணர்ந்துள்ளது. பகவத் கீதையில் கூட  கிருஷ்ணர் யோகா குறித்து குறிப்பிட்டுள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு வர யோகா செய்யுங்கள் என்று  பிரதமர் மோடி  தனது உரையில் தெரிவித்தார்.

Published by
kavitha

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago