சர்வதேச யோகா தினம் -அங்கமாக்கி கொள்ளுங்கள் அன்றாடம்!

Default Image

இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் இன்று 6-வது சர்வதேச யோகா தினத்தை ஒட்டி நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி  யோகா குறித்து உரையாற்றியுள்ளார்.

சர்வதேச யோகா தினமானது ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை வரவேற்கும் விதமாகவும் உடல் ஆரோக்கியத்தை வழுப்படுத்தும் கலைகளில் ஒன்றாக திகழக்கூடியதுமான யோகா  நம்பிக்கையை விதைக்கும் என நாட்டு மக்களிடம்  இன்று காலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

நாட்டு மக்களிடம் பிரதமரின் உரை:

நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி 6ஆவது சர்வதேச யோகா தினத்திற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும். சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது.

இந்த ஆண்டு குடும்பத்துடன் யோகா செய்யுங்கள், கொரோனா பரவி வரும் நிலையில் நாட்டு மக்கள் யோகா கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளதாக தெரிவித்த பிரதமர் உங்களது அன்றாட வாழ்க்கையில் யோகாவை ஒரு அங்கமாக பழக்குங்கள். யோகா உடல் வலிமையுடன் நம் மன வலிமையையும் மேம்படுத்துகிறது. யோகாவிற்கு மதம், மொழி, நாடு என்ற எந்த பேதமும் கிடையாது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த உலகம் தற்போது யோகாவின் பயன்களை உணர்ந்துள்ளது. பகவத் கீதையில் கூட  கிருஷ்ணர் யோகா குறித்து குறிப்பிட்டுள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு வர யோகா செய்யுங்கள் என்று  பிரதமர் மோடி  தனது உரையில் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்