உலகம் முழுவது ஊரடங்கு… உணவின்றி அமைப்பு சாரா தொழிலாளர்கள் இறந்து விடுவார்கள்… எச்சரிக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு…

Published by
Kaliraj

உயிர்க்கொல்லி வைரஸ் தொற்றான கொடிய கொரோனா வைரஸ் நோய் பரவலால் உலகம் எங்கிலும் மக்களை  வெளியேற விடாமல் ஊரடங்கு உத்தரவுகள்  போடப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும்  இந்த ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதிலிருந்து, ஐக்கிய நாடுகளின் சபையின்  ஒரு அங்கமான சர்வதேச தொழிலாளர் அமைப்பு, மக்களின்  வேலைவாய்ப்புகளில் கொரோனா வைரஸ்  தாக்கம் குறித்து  கண்காணித்து தொடர்ச்சியாக அறிக்கைகளையும் புள்ளிவிவரங்களையும் அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், புதன் கிழமையான நேற்று (ஏப்ரல் 29)  அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட மூன்றாவது பதிப்பில்,  உலகளவில் 330 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 200 கோடி தொழிலாளர்கள் முறைசாரா பொருளாதாரத்தில் உள்ளனர். இந்த தொழிலாளர்கள் சந்தையில் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆவர். இவர்கள்   தற்போது, கொரோனா வைரசால்  பொருளாதாரம் சரிந்துள்ளதால்  160 கோடி தொழிலாளர்களின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்ற வருமானம் ஈட்டும் திறனை கடுமையாக பாதித்துள்ளது. எனவே இந்த அமைப்பு சாரா தொழிலாளர்களையும், சிறு நிறுவனங்களையும் காக்க தற்போது  துரித நடவடிக்கைகள் தேவை என சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு கூறியுள்ளது. மேலும் இது குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைவர், கை ரைடர் கூறியுள்ளதாவது, கோடிக்கணக்கான மக்களுக்கு வருமானம் இல்லை எனில், அவர்களுக்கு உணவு இல்லை, பாதுகாப்பு இல்லை, எதிர்காலம் இல்லை என்று பொருள். உலகளவில் லட்சக்கணக்கான தொழில்கள் மூச்சை நிறுத்தும் நிலையில் உள்ளன. அவர்களுக்கென சேமிப்புகளோ, கடன் வாங்கும் சூழலோ இல்லை. இது தான் உலகின் உண்மை நிலை. அவர்களுக்கு உடனடியாக உதவவில்லை என்றால்  அவர்கள் இறந்து போவார்கள்” என அவர்  எச்சரித்துள்ளார்.

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

7 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

10 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

10 hours ago