இடைக்கால பொதுச்செயலாளரான ஈபிஎஸ் – டாக்.ராமதாஸ் ட்வீட்..!

Default Image

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து டாக்.ராமதாஸ் ட்வீட்  செய்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து டாக்.ராமதாஸ் ட்வீட்  செய்துள்ளார். அந்த ட்விட்டர்  பதிவில், சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின்  இடைக்கால பொதுச்செயலாளராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பணி சிறக்க  எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!’ என  பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்