ஈஸ்வரனை தொடர்ந்து “மாநாடு” படம் குறித்து வெளியான தகவல்.!

Published by
Ragi

ஈஸ்வரன் படத்தை முடித்து விட்டு இன்று முதல் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டுள்ளார்.

நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்”என்ற ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடித்து முடித்துள்ளார் . அதனுடன் அதற்கான டப்பிங் பணிகளையும் நேற்றைய தினம் முடித்தது குறிப்பிடத்தக்கது .  இந்த நிலையில் இன்று முதல் சிம்பு அவர்கள் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

ஆம், மாநாடு படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் புதுவையில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டுள்ளனர் . வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார் . மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . மேலும் படக்குழுவினரின் பாதுகாப்பை கவனிக்க சித்த மருத்துவர் வீரபாபுவிடம் பொறுப்பை தயாரிப்பாளர் ஒப்படைத்துள்ளார் .

அதன்படி ஷூட்டிங்கில் உள்ள அனைவருக்கும் காலை மற்றும் மாலை வேளைகளில் மூலிகை கசாயம் வழங்கவுள்ளதாகவும், வீரபாபுவின் வழிகாட்டுதலின் படி ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது . மருத்துவர் வீரபாபு கொரோனா காலக்கட்டத்தில் தனது மூலிகை மருத்துவம் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலரை குணப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விரைவில் சிம்பு அவர்கள் இந்த படத்தின் ஷூட்டிங்கையும் முடித்து விடுவார் என்று கருதப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

6 minutes ago

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…

19 minutes ago

ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…

50 minutes ago

2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…

1 hour ago

அடுத்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா எங்கு? எப்போது? வெளியானது அறிவிப்பு.!

லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…

1 hour ago

பண மோசடி வழக்கு: நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்.!

செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…

2 hours ago