இந்தியாவிலுள்ள ஹைதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட கூடிய கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும், இந்த தடுப்பூசி மூன்றாவது கட்ட பரிசோதனை இன்னும் வெளி வராமல் உள்ளது. சாதாரணமாகவே ஒரு தடுப்பூசிக்கு உலக அளவில் அங்கீகரம் கிடைக்க வேண்டுமானால், அதற்கு எப்டிஏ,உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மருந்து கட்டுப்பாடு நிறுவனத்தின் அனுமதி ஆகியவை அவசியம்.
ஆனால் இந்த அமைப்புகளின அங்கீகாரம் கிடைக்காத கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாம் தவணை டோஸ் செலுத்தி கொண்டவர்கள் கூட தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களாக தான் பிற நாடுகளால் கருதப்படுகின்றனர். இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் பெறுவதற்காக அமெரிக்காவில் உள்ள தனது பங்கு நிறுவனமான ஒகுஜன் மூலம் பாரத் பயோடெக் நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
எனவே ஒகுஜன் நிறுவனம் அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டில் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்துள்ளது. ஆனால் இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த எப்டிஏ அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி தர முடியாது என மறுத்துள்ளது. மேலும் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் குறித்த கூடுதல் விவரங்களுடன் உயிரி உரிம விண்ணப்பம் நடைமுறையில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…