லண்டன் நகரத்தில் இந்திய நாட்டை சேர்ந்த தாய் ஒருவர் அவரது மகளை 15 முறை குத்தி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த சுதா-சிவானந்தன் தம்பதிக்கு 2006 ஆம் ஆண்டு திருமணம் முடிந்து லண்டனில் வசித்து வருகிறன்றனர். இவர்களுக்கு சாயாகி என்ற பெண் குழந்தை உள்ளது. மேலும், மூவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து, இயல்பு வாழ்க்கையை எதிர்பார்த்து காத்திருந்துள்ளார் சுதா.
இந்நிலையில், கொரோனா தொற்று முடிவடையாத நிலையிலும், நாளுக்கு நாள் லண்டன் நகரத்தில் தொற்று அதிகரிப்பதையும் பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இதனால் இவருக்கு தலைவலி, உடல்வலி போன்றவை ஏற்பட்டுள்ளது. உடனே கணவரும் இவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளார். ஆனாலும், இவரது உடல் பாதிப்பு குறைவில்லை. இப்படியே நாள் போக, இவருக்கு மன ரீதியில் பல குழப்பங்கள் தோன்றியுள்ளது. தீராத நோய் ஏதும் ஏற்பட்டுள்ளது போல் நினைத்துள்ளார்.
கொலை சம்பவத்திற்கு முதல்நாள் கணவரிடம் பேசியிருக்கிறார். நான் இல்லை என்றால் குழந்தையை பார்த்துக்கொள்வீர்களா? என்று, மேலும் மறுநாள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்குமாறும் கோரியுள்ளார். ஆனால், இவற்றை சாதாரணமாக கருதிய கணவர் எப்போதும் போல அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
வீட்டில் சுதாவும் சாயாகியும் தனியாக இருந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட மனக்குழப்பத்தால், தான் இறந்த பிறகு குழந்தையை கவனித்துக்கொள்ள யாரும் இருக்கமாட்டார்கள் என்று நினைத்து குழந்தையின் கழுத்தில் 15 முறை கத்தியால் குத்தி கொன்றுள்ளார். பின்னர், அவரது வயிற்றிலும் குத்தியிருக்கிறார். குழந்தையின் சத்தம் கேட்டு வந்த பக்கத்துக்கு வீட்டு நபர், இருவரும் ரத்தத்தில் மிதப்பதை பார்த்திருக்கிறார். பின்னர், காவல்துறை மற்றும் சுதாவின் கணவர் சிவானந்தத்திற்கும் தகவலை தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இருவரில் சாயாகி இறந்துள்ளார். குணமடைந்த பிறகு, சுதாவை கொலை வழக்கில் விசாரித்துள்ளனர். அப்போது சுதாவின் மருத்துவர், நீதிபதியிடம் சில காலமாகவே அதீத மன வேதனையில் சுதா இருந்ததாக தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே இந்த கொலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் சுதாவை மனநல சட்ட அடிப்படையில் சிகிச்சைக்கு அனுப்பியுள்ளனர் நீதிபதிகள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…