இந்தியா உட்பட சில நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என துருக்கி அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவில் பரவி வருவதால் இந்திய பயணிகளுக்கு பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துருக்கியிலும் இந்திய பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. துருக்கியில் ஏற்கனவே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 47 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது துருக்கி விமான துறை கொரோனா கட்டுப்டுகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், பிரேசில், தென்னாப்ரிக்கா நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ்களையும் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அந்த 8 நாடுகளை தவிர பிற நாட்டினர் துருக்கிக்கு வருவதாக இருந்தால் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 14 நாட்களுக்கு முன்பதாகவே வரலாம், அவர்கள் தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமாகி இருந்தாலும் அவர்கள் துருக்கிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…