கொரோனாவுக்கு பயந்து அமெரிக்க விமான நிலையத்தில் மூன்று மாதங்கள் பதுங்கி வாழ்ந்த இந்தியர் கைது!

Published by
Rebekal

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து அமெரிக்காவில் உள்ள விமான நிலையத்தில் தங்கியிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் காவல்துறையினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒரு வருட காலமாக உலகமே நடுங்கி போயிருக்கிறது. பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், கோடிக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு தற்போது வரையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கான மருந்துகள் கண்டறியப்பட்டுளளது என பல இடங்களில் அனுமதிக்கப்பட்டு வந்தாலும், இந்த மருந்துகள் மூலமாகவும் சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதுதான் ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாக இருந்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவுக்கு பயந்து பல பணக்காரர்கள் வெளியிடங்களில் சென்று தங்கி வருகின்றனர், சிலர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அது போல இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆதித்யா சிங் எனும் ஒருவர் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி சிகாகோ நகரில் உள்ள விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

கொரோனா வைரஸ்க்கு பயந்து அங்கேயே தங்கி இருந்துள்ளார். விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகம் உள்ள பகுதியில் தங்கியிருந்த அவரை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்துள்ளனர். இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பதாக விமான நிலைய அதிகாரியின் தொலைந்துபோன ஐடி கார்டை காண்பித்து இதுதான் நான் என கூறியுள்ளார். இவர் சொல்வது பொய் என கண்டறிந்த அதிகாரிகள் ஆதித்யா சிங்கை பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல், தடைசய்யப்பட்ட பகுதியில் தங்கியிருத்தல், அதிகாரிகளின் அடையாள அட்டையை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அதன் பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மருத்துவம் மேலாண்மை படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர் எனவும் வேலை இல்லாமல் இருந்த அவர் கொரோனா அச்சத்தில் அக்டோபர் 19ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதியில் வரையிலும் விமான நிலையத்திலேயே தங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து நீதிமன்றத்தில் காவல்துறையினர் இவரை ஆஜர் படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அவருக்கு குற்றப்பின்னணி ஏதும் இல்லாவிட்டாலும், ஒரு பன்னாட்டு விமான நிலையத்தில் எப்படி மூன்று மாதங்கள் ஒருவர் தங்கியிருந்தார் என பாதுகாப்பு அதிகாரிகளிடம் நீதிபதி சூசன்னா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தடை செய்யப்பட்ட பகுதியில் பதுங்கி இருந்ததால் ஆதித்யா சிங்கை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், ஜனவரி 27-ஆம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும் எனவும், அப்போது ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதமாக கட்டினால் பெயிலில் விடுவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…

3 hours ago

RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!

ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

5 hours ago

போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…

5 hours ago

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…

6 hours ago

மிரட்டல் நாயகன் பட்லர் தொட்டதெல்லாம் தூள்.., டெல்லியை வீழ்த்தி குஜராத் மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

6 hours ago

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…

7 hours ago