இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் கனடா செல்ல அந்நாட்டு அரசு 30 நாட்கள் தற்காலிக தடை விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் கனடா செல்ல அந்நாட்டு அரசு 30 நாட்கள் தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் பயணிகளுக்கு தொற்று உறுதியாகி இருப்பது அதிகரித்து வரும் நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் பயணிகள் விமானத்துக்கு கனடா போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கனடா போக்குவரத்து துறை மந்திரி ஓமர் அல்காப்ரா கூறுகையில், இந்தியாவில் இருந்து கனடா வரும் விமான பயணிகளுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்படுகிறது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமானம் 30 நாட்கள் தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…