இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் கனடா செல்ல அந்நாட்டு அரசு 30 நாட்கள் தற்காலிக தடை விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் கனடா செல்ல அந்நாட்டு அரசு 30 நாட்கள் தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் பயணிகளுக்கு தொற்று உறுதியாகி இருப்பது அதிகரித்து வரும் நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் பயணிகள் விமானத்துக்கு கனடா போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கனடா போக்குவரத்து துறை மந்திரி ஓமர் அல்காப்ரா கூறுகையில், இந்தியாவில் இருந்து கனடா வரும் விமான பயணிகளுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்படுகிறது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமானம் 30 நாட்கள் தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…