துபாயில் இந்தியர் ஒருவர் மசாஜ் செய்வதற்காக சென்ற இடத்தில் நான்கு பெண்களால் கத்தி முனையில் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெண்டர் எனும் துபாய் டேட்டிங் அப்ளிகேஷனில் பெண்கள் மசாஜ் செய்வது போன்ற புகைப்படத்துடன் இந்திய ரூபாய்க்கு நான்காயிரம் மட்டுமே ஆஃபர் கொண்ட ஒரு மசாஜ் இருப்பதாக விளம்பரம் வந்துள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த இந்திய இளைஞர், மசாஜ் செண்டர் ஒருவர் எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்து விளம்பரத்தில் வைத்த தொலைபேசி நம்பருக்கு அழைத்து விசாரித்து அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் தங்களது மசாஜ் சென்டர் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து அவரும் அங்கு செல்ல, அங்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த 4 பெண்கள் இருந்துள்ளனர்.
உள்ளே சென்ற அந்த இளைஞரை, கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, அவரை தொலைபேசியில் இருந்து தங்களது வங்கி கணக்குக்கு அவரிடம் இருந்த பணத்தை எல்லாம் அனுப்ப வைத்துள்ளனர். அதன்பின் அவரது கிரெடிட் கார்டை எடுத்து அதில் உள்ள பணத்தையும் எடுத்துள்ளனர். அவரது ஐ போனையும் எடுத்துவிட்டு இளைஞருக்கு சரமாரியாக அடி கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அவர் தனது வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக பணம் திருடப்பட்டுள்ளதாக வங்கிக்கு தெரிவித்துள்ளதுடன், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு பெண் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆசையாக மசாஜ் செய்வதற்காக சென்று 55 லட்சம் ரூபாயை இழந்த இந்திய இளைஞர் குறித்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…