இந்திய இளம் தொழிலதிபர் வித்யுத் மோகன் ஐ.நா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு வழங்கும், ‘புவியின் இளம் சாதனையாளர்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.நா சபையானது, அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வருகிறது. ஐ.நா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக சிறந்த ஆலோசனைகளை வழங்குவதோடு, அதை செயல்படுத்தும் இளம் தொழில் அதிபர்களுக்கு, ‘புவியின் இளம் சாதனையாளர்’ என்ற விருதை வழங்கி வருகிறது.
இதனையடுத்து இந்த ஆண்டு, இந்த விருதுக்கு இந்திய இளம் தொழிலதிபர் வித்யுத் மோகன் உட்பட 7 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் விவசாய கழிவுகளை எரிப்பதால் ஆண்டுதோறும் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில், மோகன் 2018-ம் ஆண்டு, ‘டகாசார்’என்ற நிறுவனத்தை, கெவின் என்பவருடன் இணைந்து துவங்கினார்.இந்த நிறுவனமானது விவசாயிகள் விவாசாய கழிவுகளை எரிப்பதை தடுப்பதோடு, அதனை வருமானமாக்கும் வழிமுறைகளையும் கற்றுக்கொடுக்கிறது. மேலும் விவசாயிகளிடமிருந்து வைக்கோல், உமி, தேங்காய் நார்கள் ஆகியவற்றைக் இந்த நிறுவனம் வாங்கி, கரி தயாரிக்கிறது.
இதனால் விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பதோடு, காற்று மாசு கட்டுப் படுத்தப்படுகிறது. இந்திய இளம் தொழிலதிபர் வித்யுத் மோகனின் இந்த பணியை பாராட்டி, ஐ.நா. இவருக்கு புவியின் இளம் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்துள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…