லைகா நிறுவனத்துடனான இந்தியன் – 2 படப்பிரச்சனையை பேசித்தீர்க்க முடியவில்லை என உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் பதில் அளித்துள்ளார்.
இந்தியன்-2 படப்பிடிப்பின் போது நடந்த விபத்தின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்நியன் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.
இதனையடுத்து, பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், இந்தியன்-2 படத்தை முடிக்காமல், வேறு படத்தை இயக்க தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவால் இந்தியன்-2 படபிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது. லைகா – ஷங்கர் கலந்துபேசி இந்தியன்-2 படப்பிரச்னைக்கு தீர்வு காணுங்கள் என நீதிமன்றம் அறிவுறுத்திருந்த நிலையில், உடன்பாடு இல்லை என்று இயக்குனர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
லைகா நிறுவனத்துடனான இந்தியன் 2 படப்பிரச்சினையை பேசித்தீர்க்க முடியவில்லை. லைகா நிறுவனத்துடனான பிரச்சினைக்கு நீதிமன்றமே தீர்வு காணவேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளார். ஷங்கர் விளக்கம் அளித்ததை தொடர்ந்து வாழ்கை உயர்நீதி மன்றம் தள்ளி வைத்தது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…