“2027 க்குள் பெட்ரோல் மூலம் இயங்கும் இரு சக்கர வாகன விற்பனையை நிறுத்த வேண்டும்” – ஹீரோ எலக்ட்ரிக் ..!

Published by
Edison

2027 க்குள் பெட்ரோல் மூலம் இயங்கும் இரு சக்கர வாகன விற்பனையை இந்தியா நிறுத்த வேண்டும் என்று ஹீரோ எலக்ட்ரிக் தெரிவித்துள்ளது.

மின்சார வாகனங்கள் போன்ற சுத்தமான ஆற்றல் வாகனங்களை மாற்றுவதை அதிகப்படுத்த 2027 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல் எரிபொருளால் இயங்கும் இரு சக்கர வாகனங்களின் விற்பனையை நாடு முழுவதும் நிறுத்த வேண்டும் என்று மின்சார-ஸ்கூட்டர் தயாரிப்பாளர் ஹீரோ எலக்ட்ரிக் அழைப்பு விடுத்துள்ளது.

மாற்று எரிசக்தி வாகனங்களை ஏற்றுக்கொள்வதில் சீனா போன்ற பிற நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது என்று நிறுவனத்தின் MD நவீன் முன்ஜால் ஒரு பேட்டியில் கூறினார்.மேலும்,அவர் கூறுகையில்:”மின்சார வாகனங்களுக்கான இந்தியாவின் மாற்றம் அதிக விலை மற்றும் போதிய சார்ஜிங் உள்கட்டமைப்பால் தடைபட்டுள்ளது.

குறிப்பாக,ப்ளூம்பெர்க் என்இஎஃப் படி, உலகின் மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் சீனாவின் பங்கு 97% என்றாலும், இந்தியாவில், இ-ஸ்கூட்டர்களின் பங்கு மொத்தத்தில் 1% மட்டுமே.

மேலும்,பெட்ரோல் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி நாட்டின் சாலைகளில் உள்ள 296 மில்லியன் வாகனங்களில் 75% ஆகும்.இதனால்,பெட்ரோலால் இயங்கும் இரு சக்கர வாகனங்களை சுத்தமான ஆற்றலுடன் மாற்ற வேண்டியதன் அவசியம் உள்ளது.

அதன்படி,2007 இல் நிறுவப்பட்ட, ஹீரோ எலக்ட்ரிக் அதன் திறனை ஆண்டுக்கு 500,000 யூனிட்டுகளுக்கு ஐந்து மடங்கு அதிகரிக்க ஏழு பில்லியன் ரூபாய்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மின்சார ஸ்கூட்டர் நிறுவனம் சுற்றுச்சூழலை மேம்படுத்த நாடு முழுவதும் சார்ஜிங் நிலையங்களை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது.

மேலும், ஹீரோ எலக்ட்ரிக் தனது சர்வதேச இருப்பை ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் விரிவுபடுத்துகிறது.அதிக போட்டி வரும்போது, சந்தையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது, அதைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று  கூறினார்.

Recent Posts

கிருஷ்ணகிரி, தர்மபுரி மொத்தம் 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

21 minutes ago

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

2 hours ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

2 hours ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

3 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

3 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

4 hours ago