கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று .
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஓராண்டாக தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்தியாவில் இந்த வைரஸின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தனது ஆட்டத்தை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இதனை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது மட்டுமல்லாமல் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
மருத்துவமனைகளில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் குறைவு காரணமாகவும் உயிரிழப்பது வேதனையை அளிக்கிறது. இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் பண்ணுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் பரிதாபமான சூழ்நிலைகளும் தற்போதைய சூழலில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறுகையில், இந்தியாவின் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. இது வேதனை அளிக்கிறது. கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று என தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…