அமெரிக்காவுக்கு Hydroxychloroquine மருந்தை வழங்க இந்தியா முடிவு.!

Default Image

கொரோனா தடுப்புக்காக அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் ஆர்டர் செய்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை வழங்க இந்தியா முன்வர வேண்டும் என்றும் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதித்தால் பாராட்டு, இல்லையென்றால் பதிலடி என டிரம்ப் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு வழங்க இந்தியா முடிவெடுத்துள்ளது. 

அண்டை நாடுகள், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. மேலும் மனிதாபிமான அடிப்படையில் பாரசிட்டமால், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்யப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருந்து ஏற்றுமது விவகாரத்தை அரசியலாக்க விருப்பவில்லை எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் மருந்தை அனுப்பாவிடில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையில், இந்தியா மருந்தை அனுப்ப முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்