இலங்கையில் வன்முறை, அவசர நிலை எதிரொலி! இந்தியா- இலங்கை இடையேயான போட்டி நடைபெறுமா?

Default Image

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் உள்ள போதும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் சிங்களவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான மோதல் வலுத்துள்ளதால் இன்று முதல் 10 நாட்களுக்கு அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் இன்று அங்கு தொடங்குகிறது.

முதல் போட்டி இந்தியா- இலங்கை இடையே கொழும்புவில் மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில் வன்முறை மற்றும் அவசர நிலை காரணமாக போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் திட்டமிட்டபடி இந்தியா இலங்கை அணிகள் மோதும் போட்டி நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் சங்க சி.இ.ஓ. அஸ்லே டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்