கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகள் இருந்து பயணிகள் பாகிஸ்தான் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதால் மக்கள் பெருமூச்சு விட்டனர். ஆனால் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா அதிகரித்துள்ளதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தடுப்பூசி போட்டு இரண்டு நாட்களிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகள் இருந்து பயணிகள் பாகிஸ்தான் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
அதன்படி பிரேசில், போட்ஸ்வானா, கொலம்பியா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, சாம்பியா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்படுவதாகவும், இந்த தடை 23ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…