சூரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அடுத்து இரண்டு புதிய மருத்துவமனைகளை கொரோனா நோயாளிகளுக்காக மாற்றுவதாக முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, சூரத்தில் கொரோனா வைரஸ் குறித்த நிலைமையை ஆய்வு செய்த முதல்வர் விஜய் ரூபானி மற்றும் மாநில துணை முதல்வரான நிதின் படேல், செய்தியாளர்களிடம் பேசிய போது, ஜூன் 20 முதல் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து ஜூன் 29 முதல் சராசரியாக 200-க்கும் மேற்பட்டோர் கொரனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
முதல் ஊரடங்கிற்கு பின்னர் ஜவுளி மற்றும் வைர தொழிலாளர்களிடமிருந்து தான் அதிகபட்சமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுவதாக அறிவித்துள்ளார். மேலும் கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை அடுத்து, சூரத்தின் புதிய சிவில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஸ்டெம் செல் மருத்துவமனை மற்றும் சிறுநீரக மருத்துவமனையை கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக மாநில அரசு 100 கோடி ரூபாய் செலவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கூடுதலாக சூரத்தில் 200 வென்டிலேட்டர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், அவை ஓரிரு நாட்களில் வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனியார் மருத்துவமனைகள் தங்கள் படுக்கைகளில் 50% கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்க ஒப்பு கொண்டதாகவும் கூறிய விஜய் ரூபானி, வைர மற்றும் ஜவுளி தொழில் செய்பவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், கொரோனாவிற்கான விதிமுறைகளை கடைபிடிக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விதிகளை மீறினால் சந்தைகள் உட்பட பலதும் மூடப்படும். ஏனெனில் கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதே எங்கள் முதல் பொறுப்பு என்று கூறியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…