ஈராக்கில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 6 பேர் பலி !!!

Default Image
  • இந்த தாக்குதல் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 6 பேர் பலியாகி உள்ளதாகவும் , 7 பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகிறார்கள்.
  • மேலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் சாலை ஓரங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20 குண்டுகள் கண்டுபிடித்து  செயலிழக்க செய்தனர்.

ஈராக்கின் கிழக்குப்பகுதியில் உள்ள  தியாலா மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அதிகமாக உள்ளனர்.இந்த நிலையில் தியாலா மாகாணத்தின் தலைநகரான  பாகுபா நகரில் இருந்து 2 கி.மீ. வட கிழக்கில் உள்ள ஹாவ்த் அல் வக்ப் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறி வைத்து கடந்த சில தினங்களாக பாதுகாப்பு படைகள் கடுமையான தாக்குதல் நடத்தி வந்தனர்.

இந்த தாக்குதல் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 6 பேர் பலியாகி உள்ளதாகவும் , 7 பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகிறார்கள்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில்  ராணுவம், மாகாண அதிரடி போலீஸ் படையினர், துணை ராணுவத்தினர் கூட்டாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் சாலை ஓரங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20 குண்டுகள் கண்டுபிடித்து  செயலிழக்க செய்தனர்.

இந்த தகவல்களை மாகாண கவுன்சில் பாதுகாப்பு குழு தலைவர் சாதிக் அல் உசைனி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்