நோய் எதிர்ப்பு சக்தி 3 மாதத்திற்கு தான்! மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம்! – ஐசிஎம்ஆர்

Published by
லீனா

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்த வைரஸை தடுக்க, தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இதுவரை இந்த வைரஸை தடுக்க அதிகார பூர்வ மருந்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஐசிஎம்ஆர் கொரோனா வைரஸில் இருந்து, குணமடைந்தவர்களின் நிலை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடலில், நோய் எதிர்ப்பு சக்தி 3 முதல் 5 மாதங்கள் மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளது. ஒருவருக்கு ஒருமுறை கொரோனா வந்தால், மறுமுறை வராது என்பது, தவறான தகவல்.

இந்நிலையில், ஐசிஎம்ஆர் இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்க்கவா அளித்துள்ள பேட்டியில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், மீண்டும் வைரஸால் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதில் புள்ளிவிவரங்களையும் சேகரித்து வருகிறோம். மேலும், கொரோனவால் பாதிக்கப்பட்டு, மீண்டவர்களின் உடலில் நோய்  எதிர்ப்பு சக்தி குறைந்தபட்சம் 3 மாதம் வரையிலும், அதிகபட்சமாக 5 மாதம் வரையிலும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 90 நாட்களுக்கு பின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்கினால், மீண்டும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, தொற்றில் இருந்து மீண்டவர்கள், அலட்சியமாக முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…

9 minutes ago

MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!

மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…

40 minutes ago

“மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும் ” – ராஜ் தாக்கரே.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…

1 hour ago

தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!

தூத்துக்குடி : திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தனது தூத்துக்குடி மக்களவை தொகுதி சார்ந்து முக்கிய அறிவிப்பு…

2 hours ago

செங்கோட்டையனை பாஜக பயன்படுத்துகிறதா? செல்லூர் ராஜு கொடுத்த பதில் இதோ…

மதுரை : சமீப நாட்களாகவே அதிமுக உட்கட்சி விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவுக்கு அக்கட்சியினரின் செயல்பாடுகள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. முதலில்…

3 hours ago

“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!

சென்னை : நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை…

3 hours ago