சிறந்த நோக்கம் மற்றும் அருமையான தயாரித்தலுக்கு பிரட்ரிக் மற்றும் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.
2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத் திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.பல்வேறு பிரச்சனைகளை கடந்து தற்போது இந்த படம் நாளை ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் தற்போது உலகளவில் ஓடிடியில் வெளியிடுவதற்கு முன்பு பல பிரபலங்களுக்காக முன்னோட்டம் ஒன்று நடைபெற்றது. அதன் மூலம் பல பிரபலங்கள் பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்து பாராட்டி வரும் நிலையில், 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வெற்றியடைந்த திரைப்படம் சில்லுக்கருப்பட்டி. இந்த படத்தின் இயக்குனர் பொன்மகள் வந்தாள் படத்தினை பார்த்து விட்டு கூறியதாவது, நான் பொன்மகள் வந்தாள் படத்தின் ஆன்லைன் பிரீமியர் ஷோவை பார்த்தேன் என்றும், நீதிமன்றத்தில் நடந்த அந்த காட்சியால் உணர்ச்சிவசப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
வெண்பாவை நடிக்கும் ஜோ மாம் தன்னை ஜோதிகா மற்றும் அவரது மகளின் இடத்தில் நிறுத்தி ‘தி ஜோதிகா கேஸை’ எதிர்த்து போராடுவது தன்னை பிரமிக்க வைத்ததாகவும், இது ஒரு முக்கியமான படம் என்றும், மேலும் பாதிக்கப்பட்டவர்களையும், உயிர் பிழைத்தவர்களையும் பேச ஊக்குவிக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் சிறந்த நோக்கம் மற்றும் அருமையான தயாரித்தலுக்கு பிரட்ரிக் மற்றும் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…